
ஸ்டெர்லைட் 13 பேரை கொலை செய்தவர்கள் மீது வழிப்பறி வழக்காம் -நாடமாடுகிறதா சிபிஐ?
வள்ளியூர் மெர்சி கொலை-நாம் பேச தடையாக சாதி இருக்கிறதா?
திமுக தலைவர் ஸ்டாலின் அவரது தொகுதியான கொளத்தூரில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இது தொடர்பாக தன் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ இன்று (30-11-2018) கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். வார்டு எண் 69-இல் உள்ள பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப்பள்ளியில் SMART CLASS-யை துவக்கி வைத்து, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு பழைய கட்டிடம் அமைந்துள்ள இடத்தினை பார்வையிட்டேன்.
வார்டு எண் 67-இல் உள்ள மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு 1500 புத்தகம் வழங்கி, 1125 மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினேன். அதேபோல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்த இருக்கும் வார்டு எண் 64-இல் உள்ள ஹரிதாஸ் தெரு தாமரை குளத்தை ஆய்வு செய்தேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
#திமுக_தலைவர்_ஸ்டாலின் #Dmk_Leader_Stalin #Dmk
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!
அமைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!
Be the first to comment